வசந்தத்திற்கு வரவேற்பு!
ஆண்டவனின் தோட்டத்தில்
ஆண்டென்னும் பூச்செடியில்
அடுத்த மலரின் ஜனனம்! - அதை
ஆவலுடன் வரவேற்போம்!
கடந்த வருடத்தின்
கசப்பான நினைவுகளை
நெஞ்சம் மறக்கட்டும்.
அவற்றில் நாம் கற்ற
பாடம் மட்டும் நினைவில்
என்றும் இருக்கட்டும்!
அதிகாலை விடியலென
ஆனந்த பூபாளமென
அரும்பொன்று மலர்ந்து
ஆண்டாக விரிகிறது! - நம்
ஆசைகள் ஈடேற
ஆசி கொண்டு வருகிறது!
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்கலமே நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
கருவெளி" ராச.மகேந்திரன்
12/31/2008 , 1:57:58 AM
[Comment url] இறுதி வரிகளை கடக்கும் போது...தமிழ் புத்தாண்டு வந்ததோ என்று சுவற்று நாட்காட்டியை பார்த்தேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
"கருவெளி" ராச.மகேந்திரன்
Wednesday, December 31, 2008
Monday, November 24, 2008
புது மனை புகு விழா
கார்த்திகை நன்னாளில்
கற்பகத்தின் காலடியில்
புது மனை புகு விழா!-நம்
மனம் மகிழ் பெரு விழா!!
பாடல் பெற்ற திருமயிலை-இதன்
பெருமை சொல்ல வார்த்தையில்லை!
எண்ணம் போல் அங்கு ஓர் வீடு
ஏற்பட்டது இறை அருளோடு!
அன்பென்னும் வாசலிலே
அழகாக கோலமிட்டு
அக்கறையாய் பூஜைகள்
அத்தனையும் நடந்தேறும்!!
மறையோர்கள் வாழ்த்தொலிக்க
மங்கலமே சூழ்ந்திருக்க
மனங்களுமே களித்திருக்க
மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க!!
பால் பொங்கி வழிந்திருக்க
பாச உறவுகள் துணையிருக்க
நடக்கட்டும் வைபவம்-வரும்
அனைவருக்கும் இனிய அனுபவம்!!
இன்பம் என்றும் தங்கட்டும்!
இறையருள் துணை இருக்கட்டும்!
இன்று போல் என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறோம்!!!
*****************************
கற்பகத்தின் காலடியில்
புது மனை புகு விழா!-நம்
மனம் மகிழ் பெரு விழா!!
பாடல் பெற்ற திருமயிலை-இதன்
பெருமை சொல்ல வார்த்தையில்லை!
எண்ணம் போல் அங்கு ஓர் வீடு
ஏற்பட்டது இறை அருளோடு!
அன்பென்னும் வாசலிலே
அழகாக கோலமிட்டு
அக்கறையாய் பூஜைகள்
அத்தனையும் நடந்தேறும்!!
மறையோர்கள் வாழ்த்தொலிக்க
மங்கலமே சூழ்ந்திருக்க
மனங்களுமே களித்திருக்க
மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க!!
பால் பொங்கி வழிந்திருக்க
பாச உறவுகள் துணையிருக்க
நடக்கட்டும் வைபவம்-வரும்
அனைவருக்கும் இனிய அனுபவம்!!
இன்பம் என்றும் தங்கட்டும்!
இறையருள் துணை இருக்கட்டும்!
இன்று போல் என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறோம்!!!
*****************************
Monday, November 17, 2008
நிலாச்சாரல் 17-11-08
கவிதைகள்
- ஹேமமாலினி
வனவாசம்
மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!
இதோ - இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!
**********************
முரண்
சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!
*******************
கருணை
காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!
. ARUNKUMAR
12/1/2008 , 4:17:25 AM
[Comment url] super i like ur kavithai very much I also have habit of writting kavithai after seeing ur kavithai i also get inspired to write kavithai surely i will do it my friend happy 2 send message to u through nilacharal bye send any messages through my mail id
- ஹேமமாலினி
வனவாசம்
மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!
இதோ - இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!
**********************
முரண்
சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!
*******************
கருணை
காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!
. ARUNKUMAR
12/1/2008 , 4:17:25 AM
[Comment url] super i like ur kavithai very much I also have habit of writting kavithai after seeing ur kavithai i also get inspired to write kavithai surely i will do it my friend happy 2 send message to u through nilacharal bye send any messages through my mail id
Thursday, August 21, 2008
விதைகளும் வேர்களும் :
நிலாச்சாரல் இணைய இதழில் வெளியான கவிதை இது:
விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !
இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை
திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!
தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?
கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?
jesu
11/4/2008 , 1:59:45 AM
[Comment url] பாராடுக்கல் இன்னும் உன்ஙல் மனம் யெனும் நிலத்தில் கவிதை முலைக்க வல்துகல்
கருவெளி ராச.மகேந்திரன்
11/27/2008 , 2:06:46 AM
[Comment url] எல்லோரும் அவ்வாறில்லை என்றாலும் பெரும்பான்மையோர் அவ்வாறு இருப்பது வருத்தமானதே.... வேர்களுக்கான என் வாழ்த்துக்கள்... வேர்களின்றி போனால் என்னவாகும் என்பதை அனைவரும் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகிறேன். உங்களை போன்ற வேர்களிலிருந்து வரும் கனிகளும் விதைகளுமே அதற்கான ஆரம்பம்... விதைகள் தளிர்விடத்துவங்கிவிட்டன
கருவெளியிலிருந்து ராச.மகேந்திரன்
abira
12/6/2008 , 1:18:51 AM
[Comment url] னல்ல டமிலில் கவிதை எலுதிய உஙல்க்கு என் வாழுதுக்கல்.
sivashankary
12/16/2008 , 4:52:23 AM
[Comment url] கவிதை படித்தேன்,
வேர்கலின் பெருமை... எனும்
கருத்து அருமை...
பென்மையின் பெருமை
சொன்னமைக்கு பாரட்டு
விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !
இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை
திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!
தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?
கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?
jesu
11/4/2008 , 1:59:45 AM
[Comment url] பாராடுக்கல் இன்னும் உன்ஙல் மனம் யெனும் நிலத்தில் கவிதை முலைக்க வல்துகல்
கருவெளி ராச.மகேந்திரன்
11/27/2008 , 2:06:46 AM
[Comment url] எல்லோரும் அவ்வாறில்லை என்றாலும் பெரும்பான்மையோர் அவ்வாறு இருப்பது வருத்தமானதே.... வேர்களுக்கான என் வாழ்த்துக்கள்... வேர்களின்றி போனால் என்னவாகும் என்பதை அனைவரும் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகிறேன். உங்களை போன்ற வேர்களிலிருந்து வரும் கனிகளும் விதைகளுமே அதற்கான ஆரம்பம்... விதைகள் தளிர்விடத்துவங்கிவிட்டன
கருவெளியிலிருந்து ராச.மகேந்திரன்
abira
12/6/2008 , 1:18:51 AM
[Comment url] னல்ல டமிலில் கவிதை எலுதிய உஙல்க்கு என் வாழுதுக்கல்.
sivashankary
12/16/2008 , 4:52:23 AM
[Comment url] கவிதை படித்தேன்,
வேர்கலின் பெருமை... எனும்
கருத்து அருமை...
பென்மையின் பெருமை
சொன்னமைக்கு பாரட்டு
Monday, August 18, 2008
தூறல்
******
பொழிந்து முடிப்பதும்
இல்லை;
நிலம் காய
அனுமதிப்பதும் இல்லை;
இடைவிடாத தூறலாய்
எப்போதும் சாரலாய்
என் மனத்துள்
உன் நினைவுகள்!
( கல்கி 29-11-03 இதழில் வெளியானது).
மல்லிகை
*********
மரகத விரிப்பில்
வெள்ளிப் பூக்கள்-
அட, மல்லிகைகள்!
பகல் விண்மீன்
**************
கண் சிமிட்டும் விண்மீன் கூட்டம்
கண்ணெதிரே பகலில்-
மகளிர் கல்லூரி!
(மாலைமதியில் வெளியானது)
******
பொழிந்து முடிப்பதும்
இல்லை;
நிலம் காய
அனுமதிப்பதும் இல்லை;
இடைவிடாத தூறலாய்
எப்போதும் சாரலாய்
என் மனத்துள்
உன் நினைவுகள்!
( கல்கி 29-11-03 இதழில் வெளியானது).
மல்லிகை
*********
மரகத விரிப்பில்
வெள்ளிப் பூக்கள்-
அட, மல்லிகைகள்!
பகல் விண்மீன்
**************
கண் சிமிட்டும் விண்மீன் கூட்டம்
கண்ணெதிரே பகலில்-
மகளிர் கல்லூரி!
(மாலைமதியில் வெளியானது)
Tuesday, August 12, 2008
ஹைகூ:
ரோஜாவின் வேதனை!
மனிதனே!
உன் காதலியின்
புன்னகையை
உயிர்ப்பிக்க
என் உயிரை
எடுக்கிறாயே!
****************
சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற எனது படைப்பு இது!
கவனம் தப்பினால் மரணம் !!
சாலையில் செல்லும் தோழா!
சில சேதிகள் சொல்வேன், கேளாய்!!
தனித் தனிப் பாதைகள் தந்த பின்னும்
தடம் மாறிய பயணமும் ஏனோ?
சிறிய தாமதம்: அரை மணி விரயம்;
வேகமாய் விரைந்தோர்க்கு வாழ்க்கையே விரயம்!
செல்லப் போவது மனையா? மயானமா?
நினைவில் கொண்டால் நிலைக்கும் ஆயள்!
விருந்தில் மதுவருந்தி வீடு சேர நினைத்து
காடு சேர்ந்து காற்றானோர் கதை பலவுண்டு;
வீணான முயற்சியேன்? விட்டில் பூச்சி நிலையேன்?
வாழ்வை முடிக்க வ்ழி தேடிப் போவதேன்?
ஓடும் வாகனம் எந்திரம்: சரி தான்;
ஓட்டுநர் யாரும் எந்திரமில்லையே?
ஓய்வும் உறக்கமும் இல்லாமல் போனால்
ஒட்டுமொத்த ஓய்வு எல்லார்க்கும் தானே!
பரபரப்பான சாலையில் பரிதவிக்கும் ஓருயிர்!
பரிதாபப்பட்டபடி பல உயிர்கள் சுற்றிலும்;
அடித்துச் சென்றது அம்பாஸிடரா? மாருதியா?
அரைமணி நேரமாய் ஆராய்ச்சி நடக்கிறதாம்!
விரையும் உயிர் மீட்க முதலுதவி முக்கியம்!
வார்த்தைகளை சேமித்து வாழ்க்கைதனை காப்போம்!
விதிகள் நினைவிலும் விழிகள் வீதியிலும்
விலகாமல் இருக்கட்டும்!
விபத்துகள் இல்லாமல் மறையட்டும்!!
******************
ரோஜாவின் வேதனை!
மனிதனே!
உன் காதலியின்
புன்னகையை
உயிர்ப்பிக்க
என் உயிரை
எடுக்கிறாயே!
****************
சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற எனது படைப்பு இது!
கவனம் தப்பினால் மரணம் !!
சாலையில் செல்லும் தோழா!
சில சேதிகள் சொல்வேன், கேளாய்!!
தனித் தனிப் பாதைகள் தந்த பின்னும்
தடம் மாறிய பயணமும் ஏனோ?
சிறிய தாமதம்: அரை மணி விரயம்;
வேகமாய் விரைந்தோர்க்கு வாழ்க்கையே விரயம்!
செல்லப் போவது மனையா? மயானமா?
நினைவில் கொண்டால் நிலைக்கும் ஆயள்!
விருந்தில் மதுவருந்தி வீடு சேர நினைத்து
காடு சேர்ந்து காற்றானோர் கதை பலவுண்டு;
வீணான முயற்சியேன்? விட்டில் பூச்சி நிலையேன்?
வாழ்வை முடிக்க வ்ழி தேடிப் போவதேன்?
ஓடும் வாகனம் எந்திரம்: சரி தான்;
ஓட்டுநர் யாரும் எந்திரமில்லையே?
ஓய்வும் உறக்கமும் இல்லாமல் போனால்
ஒட்டுமொத்த ஓய்வு எல்லார்க்கும் தானே!
பரபரப்பான சாலையில் பரிதவிக்கும் ஓருயிர்!
பரிதாபப்பட்டபடி பல உயிர்கள் சுற்றிலும்;
அடித்துச் சென்றது அம்பாஸிடரா? மாருதியா?
அரைமணி நேரமாய் ஆராய்ச்சி நடக்கிறதாம்!
விரையும் உயிர் மீட்க முதலுதவி முக்கியம்!
வார்த்தைகளை சேமித்து வாழ்க்கைதனை காப்போம்!
விதிகள் நினைவிலும் விழிகள் வீதியிலும்
விலகாமல் இருக்கட்டும்!
விபத்துகள் இல்லாமல் மறையட்டும்!!
******************
Tuesday, July 29, 2008
ஹைகூ கவிதைகள்:
*******************
கருணை
**********
காற்றே!
கருணை செய்க!!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!
***********
தேர்தல்
*******
சுவர்களுக்கு
சுண்ணாம்புக் குளியல்-
தேர்தல் வந்தாச்சு!
**************
கரையேற்றம்
***********
திருமதி ஆகி விட்ட மகள்
கல்யாணக் கரையில்-
பெற்றோர் கடனென்னும் கடலில்!!
********************
*******************
கருணை
**********
காற்றே!
கருணை செய்க!!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!
***********
தேர்தல்
*******
சுவர்களுக்கு
சுண்ணாம்புக் குளியல்-
தேர்தல் வந்தாச்சு!
**************
கரையேற்றம்
***********
திருமதி ஆகி விட்ட மகள்
கல்யாணக் கரையில்-
பெற்றோர் கடனென்னும் கடலில்!!
********************
கவிதைக்கு ஓர் கவிதை
***********************
நாட்டின் விடுதலைக்கு
ஓர் கவிதை-அன்றாடம்
வீட்டில் சிறைப்பட்ட
வஞ்சியரின் விடுதலைக்கு
ஓர் கவிதை-பூத்து
வரும் இயற்கையினைப்
பாராட்டி ஓர் கவிதை-
சோற்றுக்கில்லாத சோகத்தை
சொல்லிடும் ஓர் கவிதை-
அதனால் உண்டான தார்மீக
கோபத்தை கொட்டிடும்
ஓர் கவிதை-
பாஞ்சாலியின் சபதத்தை
பகர்ந்திடுவது ஓர் கவிதை!
பாரதத்தின் பெருமையினை
புகன்றிடுவது ஓர் கவிதை!
சாதி மத பேதங்களை
சாடிடுவது ஓர் கவிதை!
சிறு பிள்ளைகளும் களித்திடவே
நீதி சொல்லும் ஓர் கவிதை!
காதல் தருகின்ற இன்பத்தைக்
காட்டுகின்ற கவிதை!
கண்ணனையே எல்லாமாய்
காட்டுகின்ற கவிதை!
புரட்சியின் மேன்மையை
போற்றிடுமோர் கவிதை!
குயிலின் கீதத்தில்
கரைந்திடுமோர் கவிதை!
பாரதி!
நீ பாடாத பொருளில்லை;
அதனால் எங்கள்
பாட்டின் பொருள்
நீயன்றி வேறில்லை;
நீயே ஓர் கவிதை!
இது உனக்கு நாம்
அஞ்சலி செய்யும் சிறுவிதை!
***********************
நாட்டின் விடுதலைக்கு
ஓர் கவிதை-அன்றாடம்
வீட்டில் சிறைப்பட்ட
வஞ்சியரின் விடுதலைக்கு
ஓர் கவிதை-பூத்து
வரும் இயற்கையினைப்
பாராட்டி ஓர் கவிதை-
சோற்றுக்கில்லாத சோகத்தை
சொல்லிடும் ஓர் கவிதை-
அதனால் உண்டான தார்மீக
கோபத்தை கொட்டிடும்
ஓர் கவிதை-
பாஞ்சாலியின் சபதத்தை
பகர்ந்திடுவது ஓர் கவிதை!
பாரதத்தின் பெருமையினை
புகன்றிடுவது ஓர் கவிதை!
சாதி மத பேதங்களை
சாடிடுவது ஓர் கவிதை!
சிறு பிள்ளைகளும் களித்திடவே
நீதி சொல்லும் ஓர் கவிதை!
காதல் தருகின்ற இன்பத்தைக்
காட்டுகின்ற கவிதை!
கண்ணனையே எல்லாமாய்
காட்டுகின்ற கவிதை!
புரட்சியின் மேன்மையை
போற்றிடுமோர் கவிதை!
குயிலின் கீதத்தில்
கரைந்திடுமோர் கவிதை!
பாரதி!
நீ பாடாத பொருளில்லை;
அதனால் எங்கள்
பாட்டின் பொருள்
நீயன்றி வேறில்லை;
நீயே ஓர் கவிதை!
இது உனக்கு நாம்
அஞ்சலி செய்யும் சிறுவிதை!
Monday, July 28, 2008
I'm on my way!
The place
I have to reach
is long, so long;
The path
I have to tread
is dark, so dark;
The load
I have to carry
is heavy, so heavy;
There is no one
to accompany
in my journey;
Never mind!
Never mind!!
There, at a distance
shines a flash;
Though slow,
my steps are leading
surely there;
With confidence as torch
and efforts as path
my journey has started;
I'm on my way;
Oh! my friends,
please wait there,
Within very short time,
I'll join you there!!!
***********
I have to reach
is long, so long;
The path
I have to tread
is dark, so dark;
The load
I have to carry
is heavy, so heavy;
There is no one
to accompany
in my journey;
Never mind!
Never mind!!
There, at a distance
shines a flash;
Though slow,
my steps are leading
surely there;
With confidence as torch
and efforts as path
my journey has started;
I'm on my way;
Oh! my friends,
please wait there,
Within very short time,
I'll join you there!!!
***********
Wednesday, July 23, 2008
மழலைகள்
***********
சின்னஞ்சிறு முத்துக்கள்
சிந்திடும் நல்முத்தங்கள்
சிரிக்கும் முல்லை அரும்புகள்
சுகமாய் வீசும் தென்ற்ல்கள்!
சிறகில்லாத புறாக்கள்
சுருதியுடன் கூடிய பாடல்கள்
சுழித்து ஓடும் ஆறுகள்
சாதிகள் தெரியா மேதைகள்!!
சரிந்து விழுகின்ற அருவிகள்
சங்கீதம் பாடும் குயில்கள்
சத்தியம் பேசும் அரிச்சந்திரர்கள்
சமரச மொழியின் எழுத்துக்கள்!!!
***********
சின்னஞ்சிறு முத்துக்கள்
சிந்திடும் நல்முத்தங்கள்
சிரிக்கும் முல்லை அரும்புகள்
சுகமாய் வீசும் தென்ற்ல்கள்!
சிறகில்லாத புறாக்கள்
சுருதியுடன் கூடிய பாடல்கள்
சுழித்து ஓடும் ஆறுகள்
சாதிகள் தெரியா மேதைகள்!!
சரிந்து விழுகின்ற அருவிகள்
சங்கீதம் பாடும் குயில்கள்
சத்தியம் பேசும் அரிச்சந்திரர்கள்
சமரச மொழியின் எழுத்துக்கள்!!!
எங்கள் இனம்
எங்கள் இனம்
******************
மேடையில் முழங்கினார் தலைவர்:
"எங்கள் இனப் பெரியவருக்கு
ஏன் இன்னும் சிலை இல்லை?"
மாநாட்டில் தீர்மானம்....
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட்ம்...
கண்டனப் பேரணி.....
உண்ணாவிரதம்....
ஊர்வலப் போராட்டம்...........
தேர்தல் நெருங்கி வர,
அனுமதி கிடைத்தது,
திறப்பு விழா !
வெகு விமரிசையாய்!!
பாராட்டுக்கள் குவிந்தன,
சிலை திறந்த சீர்திருத்தவாதி,
குரல் கொடுத்த தலைவர்,
அரசு அதிகாரிகள்,
ஆளுங்கட்சி பிரமுகர்கள்
என அனைவருக்கும்-
சிலையாய் நின்றவருக்குத் தவிர!
இதோ-
கூத்து முடிஞ்சாச்சு!
குழுமியவர் போயாச்சு!!
இனி,
அடுத்தது அவருடைய
பிற்ந்த நாளோ,
நினைவு நாளோ
வரும் வரை
சிலையாய் சிரிப்பவருக்கு துணை
எச்சமிட வரும் பறவை இனம் மட்டுமே!
******************
மேடையில் முழங்கினார் தலைவர்:
"எங்கள் இனப் பெரியவருக்கு
ஏன் இன்னும் சிலை இல்லை?"
மாநாட்டில் தீர்மானம்....
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட்ம்...
கண்டனப் பேரணி.....
உண்ணாவிரதம்....
ஊர்வலப் போராட்டம்...........
தேர்தல் நெருங்கி வர,
அனுமதி கிடைத்தது,
திறப்பு விழா !
வெகு விமரிசையாய்!!
பாராட்டுக்கள் குவிந்தன,
சிலை திறந்த சீர்திருத்தவாதி,
குரல் கொடுத்த தலைவர்,
அரசு அதிகாரிகள்,
ஆளுங்கட்சி பிரமுகர்கள்
என அனைவருக்கும்-
சிலையாய் நின்றவருக்குத் தவிர!
இதோ-
கூத்து முடிஞ்சாச்சு!
குழுமியவர் போயாச்சு!!
இனி,
அடுத்தது அவருடைய
பிற்ந்த நாளோ,
நினைவு நாளோ
வரும் வரை
சிலையாய் சிரிப்பவருக்கு துணை
எச்சமிட வரும் பறவை இனம் மட்டுமே!
Tuesday, July 22, 2008
நெஞ்சின் சுமைகள் ******************* நீ உடனிருந்த பொழுது உலகைப் பார்த்து உரைத்தேன்- "என்னவள் மட்டும் என் உலகு" என்று. நீ என்னை உதறி விட்டு சென்ற பொழுது உலகு உரைக்கிறது- "அவன் ஒரு பைத்தியக்காரன் " என்று. பூவிதழ்களில் எல்லாம் தீ சுட்ட வடுக்கள்: ஆம், என் நெஞ்சமெனும் பூவிதழ்களில் எல்லாம் நீ சுட்ட வடுக்கள்: மூங்கிலில் துளை செய்தால் புல்லாங்குழல் ஆகும்; நீ, குழலையே துளைத்து விட்டு இசை வேண்டுமெங்கிறாய். எப்படியடி சாத்தியம்? கதறியழுத பின்னாலும் கண்ணீர் நதி காயாது; கவிதை நூறு வடித்தாலும் காதல் காயம் ஆறாது: கையிலே சுமை இருந்தால் இறக்கி வைக்க வ்ழியுண்டு; நெஞ்சத்தின் சுமைகளை இறக்கி வைக்க வழியேது? உன் நினைவென்னும் மூட்டைகளின் பாரம் அழுத்துகையில் நான் வாழ்க்கை நதியைக் கடப்பது எப்படி? ************************
Subscribe to:
Posts (Atom)