Monday, August 18, 2008

தூறல்
******

பொழிந்து முடிப்பதும்
இல்லை;
நிலம் காய
அனுமதிப்பதும் இல்லை;
இடைவிடாத தூறலாய்
எப்போதும் சாரலாய்
என் மனத்துள்
உன் நினைவுகள்!

( கல்கி 29-11-03 இதழில் வெளியானது).

மல்லிகை
*********

மரகத விரிப்பில்
வெள்ளிப் பூக்கள்-
அட, மல்லிகைகள்!

பகல் விண்மீன்
**************

கண் சிமிட்டும் விண்மீன் கூட்டம்
கண்ணெதிரே பகலில்-
மகளிர் கல்லூரி!

(மாலைமதியில் வெளியானது)

No comments: