ஹைகூ கவிதைகள்:
*******************
கருணை
**********
காற்றே!
கருணை செய்க!!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!
***********
தேர்தல்
*******
சுவர்களுக்கு
சுண்ணாம்புக் குளியல்-
தேர்தல் வந்தாச்சு!
**************
கரையேற்றம்
***********
திருமதி ஆகி விட்ட மகள்
கல்யாணக் கரையில்-
பெற்றோர் கடனென்னும் கடலில்!!
********************
Tuesday, July 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment