Tuesday, July 29, 2008

ஹைகூ கவிதைகள்:
*******************

கருணை
**********

காற்றே!
கருணை செய்க!!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!


***********

தேர்தல்
*******

சுவர்களுக்கு
சுண்ணாம்புக் குளியல்-
தேர்தல் வந்தாச்சு!

**************

கரையேற்றம்
***********

திருமதி ஆகி விட்ட மகள்
கல்யாணக் கரையில்-
பெற்றோர் கடனென்னும் கடலில்!!

********************

No comments: