Monday, November 17, 2008

நிலாச்சாரல் 17-11-08

கவிதைகள்
- ஹேமமாலினி


வனவாசம்


மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!

இதோ - இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!

**********************

முரண்

சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!

*******************

கருணை

காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!


. ARUNKUMAR
12/1/2008 , 4:17:25 AM

[Comment url] super i like ur kavithai very much I also have habit of writting kavithai after seeing ur kavithai i also get inspired to write kavithai surely i will do it my friend happy 2 send message to u through nilacharal bye send any messages through my mail id

No comments: