Monday, November 24, 2008

புது மனை புகு விழா

கார்த்திகை நன்னாளில்
கற்பகத்தின் காலடியில்
புது மனை புகு விழா!-நம்
மனம் மகிழ் பெரு விழா!!

பாடல் பெற்ற திருமயிலை-இதன்
பெருமை சொல்ல வார்த்தையில்லை!
எண்ணம் போல் அங்கு ஓர் வீடு
ஏற்பட்டது இறை அருளோடு!

அன்பென்னும் வாசலிலே
அழகாக கோலமிட்டு
அக்கறையாய் பூஜைகள்
அத்தனையும் நடந்தேறும்!!

மறையோர்கள் வாழ்த்தொலிக்க
மங்கலமே சூழ்ந்திருக்க
மனங்களுமே களித்திருக்க
மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க!!

பால் பொங்கி வழிந்திருக்க
பாச உறவுகள் துணையிருக்க
நடக்கட்டும் வைபவம்-வரும்
அனைவருக்கும் இனிய அனுபவம்!!


இன்பம் என்றும் தங்கட்டும்!
இறையருள் துணை இருக்கட்டும்!
இன்று போல் என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறோம்!!!

*****************************

Monday, November 17, 2008

நிலாச்சாரல் 17-11-08

கவிதைகள்
- ஹேமமாலினி


வனவாசம்


மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!

இதோ - இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!

**********************

முரண்

சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!

*******************

கருணை

காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!


. ARUNKUMAR
12/1/2008 , 4:17:25 AM

[Comment url] super i like ur kavithai very much I also have habit of writting kavithai after seeing ur kavithai i also get inspired to write kavithai surely i will do it my friend happy 2 send message to u through nilacharal bye send any messages through my mail id