Thursday, August 21, 2008

விதைகளும் வேர்களும் :

நிலாச்சாரல் இணைய இதழில் வெளியான கவிதை இது:

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?


jesu
11/4/2008 , 1:59:45 AM

[Comment url] பாராடுக்கல் இன்னும் உன்ஙல் மனம் யெனும் நிலத்தில் கவிதை முலைக்க வல்துகல்

கருவெளி ராச.மகேந்திரன்
11/27/2008 , 2:06:46 AM

[Comment url] எல்லோரும் அவ்வாறில்லை என்றாலும் பெரும்பான்மையோர் அவ்வாறு இருப்பது வருத்தமானதே.... வேர்களுக்கான என் வாழ்த்துக்கள்... வேர்களின்றி போனால் என்னவாகும் என்பதை அனைவரும் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகிறேன். உங்களை போன்ற வேர்களிலிருந்து வரும் கனிகளும் விதைகளுமே அதற்கான ஆரம்பம்... விதைகள் தளிர்விடத்துவங்கிவிட்டன
கருவெளியிலிருந்து ராச.மகேந்திரன்

abira
12/6/2008 , 1:18:51 AM

[Comment url] னல்ல டமிலில் கவிதை எலுதிய உஙல்க்கு என் வாழுதுக்கல்.

sivashankary
12/16/2008 , 4:52:23 AM

[Comment url] கவிதை படித்தேன்,

வேர்கலின் பெருமை... எனும்
கருத்து அருமை...
பென்மையின் பெருமை
சொன்னமைக்கு பாரட்டு

Monday, August 18, 2008

தூறல்
******

பொழிந்து முடிப்பதும்
இல்லை;
நிலம் காய
அனுமதிப்பதும் இல்லை;
இடைவிடாத தூறலாய்
எப்போதும் சாரலாய்
என் மனத்துள்
உன் நினைவுகள்!

( கல்கி 29-11-03 இதழில் வெளியானது).

மல்லிகை
*********

மரகத விரிப்பில்
வெள்ளிப் பூக்கள்-
அட, மல்லிகைகள்!

பகல் விண்மீன்
**************

கண் சிமிட்டும் விண்மீன் கூட்டம்
கண்ணெதிரே பகலில்-
மகளிர் கல்லூரி!

(மாலைமதியில் வெளியானது)

Tuesday, August 12, 2008

ஹைகூ:



ரோஜாவின் வேதனை!


மனிதனே!
உன் காதலியின்
புன்னகையை
உயிர்ப்பிக்க
என் உயிரை
எடுக்கிறாயே!

****************


சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற எனது படைப்பு இது!

கவனம் தப்பினால் மரணம் !!

சாலையில் செல்லும் தோழா!
சில சேதிகள் சொல்வேன், கேளாய்!!
தனித் தனிப் பாதைகள் தந்த பின்னும்
தடம் மாறிய பயணமும் ஏனோ?
சிறிய தாமதம்: அரை மணி விரயம்;
வேகமாய் விரைந்தோர்க்கு வாழ்க்கையே விரயம்!
செல்லப் போவது மனையா? மயானமா?
நினைவில் கொண்டால் நிலைக்கும் ஆயள்!

விருந்தில் மதுவருந்தி வீடு சேர நினைத்து
காடு சேர்ந்து காற்றானோர் கதை பலவுண்டு;
வீணான முயற்சியேன்? விட்டில் பூச்சி நிலையேன்?
வாழ்வை முடிக்க வ்ழி தேடிப் போவதேன்?
ஓடும் வாகனம் எந்திரம்: சரி தான்;
ஓட்டுநர் யாரும் எந்திரமில்லையே?
ஓய்வும் உறக்கமும் இல்லாமல் போனால்
ஒட்டுமொத்த ஓய்வு எல்லார்க்கும் தானே!

பரபரப்பான சாலையில் பரிதவிக்கும் ஓருயிர்!
பரிதாபப்பட்டபடி பல உயிர்கள் சுற்றிலும்;
அடித்துச் சென்றது அம்பாஸிடரா? மாருதியா?
அரைமணி நேரமாய் ஆராய்ச்சி நடக்கிறதாம்!
விரையும் உயிர் மீட்க முதலுதவி முக்கியம்!
வார்த்தைகளை சேமித்து வாழ்க்கைதனை காப்போம்!
விதிகள் நினைவிலும் விழிகள் வீதியிலும்
விலகாமல் இருக்கட்டும்!
விபத்துகள் இல்லாமல் மறையட்டும்!!

******************