Sunday, April 17, 2011
nenjin sumaigal
நீ உடனிருந்த போது உலகைப் பார்த்து நான் உரைத்தேன்: "என்னவள் மட்டும் போதும்; உலகெனக்கு வேண்டாம்" என்று. நீ என்னை உதறிவிட்டுச் சென்ற பிறகு உலகு என்னைப் பார்த்து உரைக்கிறது: "அதோ போகிறான் பார், பைத்தியக்காரன்" என்று. பூவிதழ்களில் எல்லாம் தீ சுட்ட வடுக்கள்; ஆம், என் நெஞ்சமெனும் பூவிதழ்களில் எல்லாம் நீ சுட்ட வடுக்கள்; மூங்கிலில் துளை செய்தால் புல்லாங்குழல் ஆகும். நீயோ, குழலையே துளைத்து இசை வேண்டுமென்கிறாய், எப்படி இது சாத்தியம்? கையிலே சுமை இருந்தால் இறக்கி வைக்க வழியுண்டு; நெஞ்சத்தின் சுமைகளை இறக்கி வைக்க வழி ஏது? உன் நினைவென்னும் மூட்டைகளின் பாரம் அழுத்துகையில் வாழ்க்கை நதியை நான் கடப்பது எப்படி? நிலாச்சாரல் sreedhar4/6/2011 , 12:43:59 PM கவிதை அருமை priya4/8/2011 , 10:03:05 PM really it was too good especially the mans crying about her memories was too hurting , my eyes filled with tears
Subscribe to:
Posts (Atom)